/indian-express-tamil/media/media_files/aSqUzt9vkrjqpmsXvuIE.jpg)
காஞ்சிபுரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சர்ச் பாதிரியார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறுமி சிஎஸ்ஐ சர்ச் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
சிறுமியின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் காலம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, பாதிரியார் எஸ்.தேவ இரக்கம் இரவு நேரத்தில் சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து வேங்கடேச பாளையம் கிராம மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தி, அதன் பரிந்துரையின் அடிப்படையில், பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.