Advertisment

உடை தேர்வு உரிமை குறித்த தமிழிசை கருத்துக்கு கனிமொழி பதிலடி

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தலைமை விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
உடை தேர்வு உரிமை குறித்த தமிழிசை கருத்துக்கு கனிமொழி பதிலடி

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தலைமை விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டுள்ளார்.

Advertisment

அதேபோல பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம். பி.கனிமொழி

ஒவ்வொருவரின் அடையாளமும் மொழி. என் மீது இன்னொரு மொழியை திணித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடிய நிலை யாருக்கும் இல்லை.

publive-image

மொழி வழியாகத்தான் என்னை உணர்ந்து கொள்கிறேன்.தாய் மொழியும் சுயமரியாதையும் கூட.மொழிப்போர் நிலை வந்து விடக்கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் தேவை. நம்மோடு மக்களோடு பேச தமிழ் தேவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா மாணவர்களும் கட்டாயமாக தமிழ் படிக்க வேண்டும் என்பது தமிழக அரசு நிலைப்பாடு.

publive-image

இன்று சில மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதும், அலுவலக மொழியாக இருந்த அதை தேசிய மொழியாக கொண்டு வருவதையும் நிச்சயமாக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டும் அல்ல மற்ற முதல்வர்களும் இதற்கு எதிர்வினை ஆற்றி உள்ளார்கள்.

publive-image

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை  கோவை வந்த போது பேசிய கருத்துக்கு கனிமொழி கூறும்போது..தந்தை பெரியார் என்ன சொல்லியுள்ளார் என்றால் அலங்காரம்,உடை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்த பயன்படுத்தும் பெண்ணுக்கு மட்டும் தான் உள்ளது. வேறு யாரும் முடிவு செய்ய முடியாது இவ்வாறு தெரிவித்தார்.

செய்தி: ரஹ்மான், கோவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment