மேடையில் ஆபாசமாக பேசிய தி.மு.க நிர்வாகி: சுட்டிக் காட்டிய குஷ்பூ; மன்னிப்பு கேட்ட கனிமொழி

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர், பாஜக-வைச் சேர்ந்த குஷ்பூ, கவுதமி, காயத்ரி ரகுராமன் ஆகியோரை சகித்துக்கொள்ள இயலாத வார்த்தையில் பேசியுள்ளார். இதை சுட்டி காட்டி நடிகை குஷ்பூ பகிர்ந்த ட்வீடுக்கு எம்.பி கனிமொழி மனிப்பு கோரியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர், பாஜக-வைச் சேர்ந்த குஷ்பூ, கவுதமி, காயத்ரி ரகுராமன் ஆகியோரை சகித்துக்கொள்ள இயலாத வார்த்தையில் பேசியுள்ளார். இதை சுட்டி காட்டி நடிகை குஷ்பூ பகிர்ந்த ட்வீடுக்கு எம்.பி கனிமொழி மனிப்பு கோரியுள்ளார்.

author-image
WebDesk
New Update
மேடையில் ஆபாசமாக பேசிய தி.மு.க நிர்வாகி: சுட்டிக் காட்டிய குஷ்பூ; மன்னிப்பு கேட்ட கனிமொழி

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர், பாஜக-வைச் சேர்ந்த குஷ்பூ, கவுதமி, காயத்ரி ரகுராமன் ஆகியோரை சகித்துக்கொள்ள இயலாத வார்த்தையில் பேசியுள்ளார். இதை சுட்டி காட்டி நடிகை குஷ்பூ பகிர்ந்த ட்வீடுக்கு எம்.பி கனிமொழி மனிப்பு கோரியுள்ளார்.

Advertisment

சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகி பேசியதாவது :

” நாங்கள் பாஜகவை தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள். பாஜகவில் 4 நடிகைகள் உள்ளனர். குஷ்பூ, நமீதா, கவுதமி இனி ஒருவர் பெயர் என்ன என்று மறந்துவிட்டேன். காயத்திரி ரகுராமன் இவர்களை வைத்து கட்சியை வளர்கிறார்கள். நாங்கள் தகுதியான நபர்களை வைத்து கட்சியை வளர்த்திருக்கிறோம்.”  என்று பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் அவர் பேசுகையில் நடிகைகளை சகித்துக்கொள்ள இயலாத வார்த்தையோடு ஒப்பிட்டுள்ளார். மேலும் ஆணாதிக்க மனோபாவதில் அவர்கள் ஒழிக்கத்தை பற்றிய வார்த்தைகளையும் பேசியுள்ளார்.

இதை குறிப்பிட்டு நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்துள்ளார். “ பெண்களை இப்படி தகாதவார்த்தையில் வசைபாடும் ஆண்கள் வளர்க்கப்பட்ட சூழல் நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. பெண்களின் பிறப்பையே தவறு என்று பேசுகிறார்கள். இவர்கள் தங்களை தலைவர் கலைஞரை பின்தொடர்பவர்கள் என்று வேறு சொல்கிக்கொள்கிறார்கள். இதுதான் முதல்வர் சொல்லும் புதிய திராவிட மாடல் ஆட்சியா ? ” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு திமுக எம்.பி கனிமொழி “ ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் இந்த செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதை  சகித்துக்கொள்ள இயலாது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயத்தின் சார்பாக வெளிப்படையாக மனிப்பு கேட்கிறேன்” என்று அவர் பதிலளித்துள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: