மீண்டும் கனிமொழி காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் பிரச்சாரத்திற்கு சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் பிரச்சாரத்திற்கு சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

author-image
WebDesk
New Update
Kanimozhi car checks

தி.மு.க வேட்பாளர் கனிமொழி பிரச்சாரத்திற்கு சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் பிரச்சாரத்திற்கு சென்ற காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

Advertisment

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகவும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிட் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சுட்டெரிக்கும் வெயிலைப் போலவே ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், நியாயமான, வெளிப்படையான தேர்தல் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக, தேர்தல் கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அண்மையில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதேபோல், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் காரையும் சோதனை செய்தனர். 

Advertisment
Advertisements

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனை செய்தனர். 

தி.மு.க வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் காரில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்றுகொண்டிருந்தார். அப்போது, நெல்லையில், கனிமொழி சென்று கொண்டிருந்த காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் காரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில், கனிமொழியின் காரில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் இல்லாததால் தொடர்ந்து செல்ல, பறக்கும் படை அதிகாரிகள் அனுமதித்தனர்.

இதே போல, 2 நாட்களுக்கு முன்ன்ர், தூத்துக்குடி மூன்றாவது மைல் என்ற இடத்தில் கனிமொழி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: