Advertisment

'தமிழ்நாடு அரசியலுக்கு பேரிழப்பு'- விஜயகாந்த் மறைவு குறித்து கனிமொழி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவு, “தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்” என திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kanimozhi has condoled the death of DMDK president Vijayakanth

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மரணத்துக்கு கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்று (டிச.28) காலமானார்.

“நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

அவரின் மறைவுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி,  எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்.  

அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijayakanth Mp Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment