/tamil-ie/media/media_files/uploads/2023/01/sa.jpg)
திமுகவிலும் ஒரு ஷிண்டே உருவாகலாம், அது கனிமொழியாக கூட இருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் சி.வி. சண்முகம் பேசினார். ” திமுக தனது கையாளாக பன்னீர் செல்வத்தை பயன்படுத்துகிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியதுபோல இம்முறையும் முடக்க அவர் முயறிச்சிக்கிறார். சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷீண்டே வெளியே உருவாகுவார். அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஜி.கே.வாசன் அதிமுகவின் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது குறிப்பிடதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.