திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., அங்குள்ள தேரையும், அதன் கலை நயத்தையும் பார்த்து ரசித்தார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி. நேற்று திருவாரூர் சென்றார். அங்கு மகளிரணி ஆய்வு கூட்டம், எம்.பி. நிதியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
நேற்று மாலை திருவாரூரில் இருந்து சென்னை திரும்பும் போது, வழியில் திருவாரூர் தேர் வழியாக வந்தார். தேரைப் பார்த்ததும், காரை நிறுத்தி கீழே இறங்கிய அவர், தேரின் கலை நயத்தை ரசித்துப் பார்த்தார். பின்னர் அவர் சென்னை புறப்பட்டார்.