மதுரையில் உத்தங்குடி கலைஞர் திடலில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நேற்று (01/06/2025) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் 27 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/gm-2-611475.jpeg)
இப்பொதுக்குழுவில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த "மண் - மொழி – மானம் காத்திட ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் சிறப்புத் தீர்மானம் உட்பட கழக புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்’’ எனவும் வலியுறுத்தப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/06/02/gm-1-291005.jpeg)
இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முயற்சியின் மூலம் கட்சிக்காக நிதி திரட்டப்பட்டது. இதில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் திரட்டி, அந்த நிதி பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வழங்கப்பட்டது. தி.மு.க இளைஞரணி வழங்கிய நிதியைவிட மகளிரணி வழங்கிய நிதி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்