Advertisment

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது மற்றும் அதன் அனுமதி நிலை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
Kanimozhi

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி மக்களவையில் கேள்வி

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது மற்றும் அதன் அனுமதி நிலை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.

Advertisment

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3வது முறை ஆட்சி அமைத்த பிறகு, ஜூலை 23-ம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்தும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார். 

இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.” என்று விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,  “கவாச் பணிகளுக்கு இதுவரை 1,216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment