Advertisment

பாரத குடியரசுத் தலைவர் என பத்திரிகை: இதன் உள்நோக்கம், அரசியல் என்ன? கனிமொழி கேள்வி

இந்திய நாட்டுக்கான ஒட்டுமொத்த செயல் திட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ்.தான் இயற்றுகிறதா? என கனிமொழி கேள்வியெழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Kanimozhi MP has warned that refusal to register self-respecting marriages is not acceptable

பாரத குடியரசுத் தலைவர் என பத்திரிகை அச்சிடப்பட்ட நிலையில் இதன் உள்நோக்கம் என்ன என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கேள்வியெழுப்பி உள்ளார்.

டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதன் பத்திரிகையில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.

இதற்கு ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், “இந்திய நாட்டுக்கான ஒட்டுமொத்த செயல் திட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ்.தான் இயற்றுகிறதா? எனக் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை.

பொதுவாக இதுபோன்ற அழைப்பிதழ்கள் எப்போதும் 'இந்திய குடியரசுத் தலைவர்' அல்லது 'இந்திய பிரதமர்' என்று தான் அச்சிடப்படும்.

இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk President Of India Mp Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment