தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? கனிமொழி பதில் இதுதான்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, கனிமொழி பதிலளித்தார். திமுக எம்எல்ஏ மகன் விவகாரக் குறித்து பேசுகையில்,

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, கனிமொழி பதிலளித்தார். திமுக எம்எல்ஏ மகன் விவகாரக் குறித்து பேசுகையில்,

author-image
WebDesk
New Update
sasa

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் கனிமொழி

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

mp-kanimozhi | nagercoil | திமுக துணை பொதுச்செயலாளரும்,  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி,  நாகர்கோவிலில் புதன்கிழமை ( ஜனவரி 24, 2024)  செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், " சென்னையில் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறது.

Advertisment

இதேபோன்று இளம் பெண்ணை நடத்திய நபர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட முடியாது; எப்படியும் திமுக அரசு குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடும். இதைத் தெரிந்து தான் அதிமுகவினர் போராட்டம் அறிவித்துள்ளார்கள்.
அதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்; அப்படி கைது செய்த பிறகு நாங்கள் போராட்டம் அறிவித்ததால் தான் இந்த கைது நடந்துள்ளது என கூறுவார்கள்" என்றார்.

 தூத்துக்குடியில் மீண்டும் போட்டி? 

தொடர்ந்து தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், " மக்களவைத் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன; பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன். தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் (மு.க ஸ்டாலின்)  முடிவெடுப்பார்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mp Kanimozhi Nagercoil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: