/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kanimozhi-1.jpg)
மணிப்பூர் வன்முறைக்கு எதிராக சென்னையில் கனிமொழி எம்.பி. பேசியபோது எடுத்த படம். (கோப்புக்காட்சி)
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணித் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு பேட்டியளித்தனர்.
அப்போது, “மணிப்பூரில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தவில்லை” என கனிமொழி கூறினார். தொடர்ந்து, “மணிப்பூரில் ஆட்சியை கலைக்க கூறவில்லை. அது சரியாகவும் இருக்காது.
மேலும் மணிப்பூர் முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது மட்டும் அவவூர் மக்களின் கோரிக்கை அல்ல. அந்த மக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு போதிய அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது” என்றார்.
இந்தச் சந்திப்பின்போது திருச்சி சிவா, விசிக தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.