தூத்துக்குடியில் ரூ.515.72 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி: கனிமொழி எம்.பி ஆய்வு

தூத்துக்குடி 363 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் நடைபெற்றுவரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்; கனிமொழி எம்.பி ஆய்வு

author-image
WebDesk
New Update
Kanimozhi

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டத்தில் உள்ள வட வல்லநாடு ஊராட்சியில், 363 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் நடைபெற்றுவரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார்.

Advertisment

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த 363 கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி கருணாநிதி, அன்று (23/05/2023) அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

Advertisment
Advertisements

இந்த பணிகள் குறித்து கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான இந்த குடிநீர் திட்டத்தின் வழியாக கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களுக்குத் தண்ணீர் தரக்கூடிய வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Kanimozhi Thoothukudi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: