/indian-express-tamil/media/media_files/RleYTPiWPvBllTE0JzbU.jpg)
கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித் அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மமாங் தய் ஆங்கிலத்தில் எழுதிய ‘தி பிளாக் ஹில்’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்த கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித் அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் எழுதப்பட்டு வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, பிற மொழிகளில் எழுதப்பட்ட படைப்புகளை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் நூல்களுக்கும் சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதில், 2024 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் மமாங் தய் எழுதிய ‘The Black Hill’ என்ற நாவலை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் மமாங் தய் ஆங்கிலத்தில் எழுதிய ‘The Black Hill’ நாவல் வெளியான அடுத்த ஆண்டே ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி பல்வேறு மொழிகளில் இருந்து ‘எனது அரசியல் வாழ்க்கை’, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 1857, இந்தியாவின் தேசிய பண்பாடு, இந்திரா காந்தி, புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத் தேடலில் அறிவியல் உணர்வு, இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், உள்ளிட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.