Advertisment

வடக்கு மண்டல ஐ.ஜி-யாக கண்ணன் ஐ.பி.எஸ் நியமனம்: மேலும் 5 முக்கிய அதிகாரிகள் மாற்றம்

Tamil Nadu News: சென்னையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தமிழக அரசு இடம் மற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
Oct 06, 2022 19:40 IST
வடக்கு மண்டல ஐ.ஜி-யாக கண்ணன் ஐ.பி.எஸ் நியமனம்: மேலும் 5 முக்கிய அதிகாரிகள் மாற்றம்

சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறை தலைவராக பி.சி.தேன்மொழி.,ஐ.பி.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tamil Nadu News: சென்னையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தமிழக அரசு இடம் மற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

சென்னை வடக்கு மண்டல காவல் துறையின் தலைவராக இருந்த பி.சி.தேன்மொழி.,ஐ.பி.எஸ்., தற்போது சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

publive-image

சென்னை ஆயுதப்படை காவல் துறை தலைவராக இருந்த என்.கண்ணன்.,ஐ.பி.எஸ்., தற்போது சென்னை வடக்கு மண்டல காவல் துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை புனித தோமையார் மலை காவல் துணை ஆணையராக இருந்த ஏ. பிரதீப்.,ஐ.பி.எஸ்., தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-V பட்டாலியன் கமாண்டன்ட் மற்றும் காவல் கண்காணிப்பாளராக இருந்த தீபக் சிவாச்.,ஐ.பி.எஸ்., தற்போது சென்னை புனித தோமையார் மலை காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-X பட்டாலியன் கமாண்டன்ட் மற்றும் காவல் கண்காணிப்பாளராக இருந்த சமாய் சிங் மீனா.,ஐ.பி.எஸ்., தற்போது சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக இருந்த தி.குமார் தற்போது தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-V பட்டாலியன் கமாண்டன்ட் மற்றும் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Ips Officers #Chennai #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment