பெட்ரோல் பங்க் வைக்க எதிர்ப்பு: குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் குதித்த மீனவ கிராம மக்கள்

'விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது' என கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவ கிராம மக்கள் 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

'விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது' என கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவ கிராம மக்கள் 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanyakumari: Chinnamuttom fishing village people protest against petrol bunk Tamil News

சின்னமுட்டம் மீனவ கிராம ஒட்டுமொத்த மக்களின் போராட்டத்திற்கு செவிமெடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை வெற்றி அடையும் வரை போராட்டம் தொடரும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

த.இ.தாகூர் - கன்னியாகுமரி

Advertisment

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவ கிராம மக்கள் கடந்த 17 நாட்களாக, புனித தோமையர் ஆலய வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 23ம் தேதி) திறக்கப்பட்ட நிலையில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முட்டம் மீனவ கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, போராட்ட குழு பொறுப்பாளர்கள், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் பிரின்ஸ் உடன் மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், மனு கொடுத்த அடுத்த தினமே பெட்ரோல் பங்க் திறக்க பட்டது.

publive-image
Advertisment
Advertisements

இந்த நிலையில், 17 வது நாளாக போராட்டத்தின் போக்கை மாற்றி, புனித தோமையர் ஆலையம் முற்றத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று கடலில் இறங்கி நின்று மதியம் வரை போராட்டம் நடைபெற்றது.

publive-image

அதன்பின் கடற்கரை சாலையில் இருந்து போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் சாலை பகுதியில் இருந்து மீண்டும் தேவாலயம் முற்றத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

publive-image

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் குறித்து மாவட்ட நிர்வாகம் அமைதி காத்து வருவதாகவும், சின்னமுட்டம் மீனவ கிராம ஒட்டுமொத்த மக்களின் போராட்டத்திற்கு செவிமெடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை வெற்றி அடையும் வரை போராட்டம் தொடரும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Kanyakumari

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: