திப்ரூகர்-கன்னியாகுமரி ரயில் சேவை குறிப்பிட்ட சில நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு ரயில்வேயில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திப்ரூகா்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் விவேக் விரைவு ரயில் பிப். 25, 28 ஆகிய நாள்களில் திப்ரூகரில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.
இதே போல் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கு மாா்ச் 2, 5 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய விவேக் விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்ட்ட இரயிலில், குறித்த தேதிகளில் இருக்கை முன் பதிவு செய்துள்ள பயணிகள் அதற்கான டிக்கெட் கட்டணத்தை எந்த இரயில்வே நிலையம் கவுண்ட்டர்களில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/