Advertisment

ஒரு எஸ்.ஐ-யின் டாஸ்மாக் டூட்டி: வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், டாஸ்மாக் மதுபானக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மற்றொருவருடன் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanyakumari thuckalay police SI speaking viral video, thauckalay tasmac, kanyakumari thuckalay tasmac, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, தக்கலை டாஸ்மாக், தக்கலையில் டாஸ்மாக் முன்பு பேசிய போலீஸ் எஸ்.ஐ, வைரல் வீடியோ, thuckalay si speaking before tasmac, viral video, tamil video news, tamil viral vieo news, tamil tasmac video news, police SI speaking to another person, thuckalay tasmac wine shop viral video

kanyakumari thuckalay police SI speaking viral video, thauckalay tasmac, kanyakumari thuckalay tasmac, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, தக்கலை டாஸ்மாக், தக்கலையில் டாஸ்மாக் முன்பு பேசிய போலீஸ் எஸ்.ஐ, வைரல் வீடியோ, thuckalay si speaking before tasmac, viral video, tamil video news, tamil viral vieo news, tamil tasmac video news, police SI speaking to another person, thuckalay tasmac wine shop viral video

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், டாஸ்மாக் மதுபானக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மற்றொருவருடன் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, மே 7-8 தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று டாஸ்மாக் கடைகள் விற்பனைக்கு தடைவிதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் மே 16-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருகிற மது பிரியர்கள் கூட்டம் அதிகம் கூடாமல் இருப்பதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் எஸ்.ஐ., 5 மணிக்கு மேல பிளாக்ல விற்கிறீங்க. மூடை மூடையாக சாரயத்தை ஏத்துறிங்க.. அதெல்லாம் எப்படி பண்றேன்னு பார்க்கிறேன் என்று கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், காவல்துறை உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்த வீடியோவில் பேசுகிற எஸ்.ஐ. தான் ரவுண்ட்ஸ்ல இருந்ததாகவும் கடையில் குவார்ட்டர் பாட்டில் கேட்க வில்லை என்றும் கூறுகிறார். பின்னர், 4.45 மணிக்கு மேல் என்ன பண்றேன்னு பார்க்கிறேன். பிளாக்ல பாட்டில் விக்கிறீங்க என்று மற்றொருவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். டாஸ்மாக் கடை முன்பு எஸ்.ஐ. மற்றொருவருடன் என்ன பேசுகிறார் என்று கேளுங்கள்.

டாஸ்மாக் கடையின் முன்பு போலீஸ் எஸ்.ஐ. பேசிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Kanyakumari Tasmac Kanyakumari District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment