Advertisment

கன்னியாகுமரி இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்!

செல்வின் சேகரது இல்லத்திற்கு சென்ற, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மரணம் அடைந்த செல்வின் சேகர்  பூத உடலுக்கு  இறுதி அஞ்சலி செலுத்தினர்.

author-image
WebDesk
New Update
Kanyakumari youths organs donated

உடல் உறுப்புகள் தானம் மூலமாக செல்வின் சேகர் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர செல்வின் சேகர். இவர், நோயால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தார். இவரது இதயம் உள்பட உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதற்கு, செல்வின் சேகரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்வந்தனர். இந்த நிலையில், செல்வின் சேகரது இல்லத்திற்கு சென்ற, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், தமிழ் நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் ஆகியோர் மரணம் அடைந்த செல்வின் சேகர்  பூத உடலுக்கு  இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கணவரது உடல் உறுப்புகளை தானமாக 6 பேருக்கு கொடுக்க முன் வந்த செல்வின் சேகரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு அவர்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய விஜய் வசந்த், “ உடல் உறுப்புகள் தானம் மூலமாக செல்வின் சேகர் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.  இதை அவர்கள் குடும்பம் முழுமையாக நம்புகிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment