பட்டுப் புடவை வியாபாரம்; ரூ. 3 கோடி வரை சுருட்டிய கர்நாடக தம்பதி: கோவை பெண்கள் கண்ணீர் மல்க புகார்

கோவையில், பல பெண்களிடம் பட்டுப்புடவை வியாபாரம் செய்யலாம் எனக் கூறி ரூ. 3 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கர்நாடக தம்பதி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில், பல பெண்களிடம் பட்டுப்புடவை வியாபாரம் செய்யலாம் எனக் கூறி ரூ. 3 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கர்நாடக தம்பதி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cbe Scam

கர்நாடக மாநிலம், தும்கூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த அமோஸ் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய தம்பதி, கடந்த 2019-ஆம் ஆண்டு கோவையில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் பெண்களிடம் அறிமுகம் ஆகி உள்ளனர்.

Advertisment

அப்போது, அவர்கள் கர்நாடகாவில் வெள்ளி ஜரிகையுடனான பட்டுப் புடவை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களுக்கு பெரிய ஆர்டர் இருப்பதாகவும், அதற்காக பணம் தேவை என்றும் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும் கூறி உள்ளனர். 

இதனை உண்மை என்று நம்பிய பெண்கள், பலரிடமிருந்து ஏராளமான பணத்தை பெற்று பல்வேறு தவணைகளில் கர்நாடக தம்பதியிடம் கொடுத்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட படி பணத்தை திருப்பி செலுத்தாத தம்பதி, ஒவ்வொரு முறையும் காரணம் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். குறிப்பாக, 15 பேரிடமிருந்து மூன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் இத்தம்பதி மோசடி செய்துள்ளனர்.

இதனடிப்படையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகாரளித்தனர். மேலும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

செய்தி - பி.ரஹ்மான்

Coimbatore scam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: