Advertisment

கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் ரெய்டு: கர்நாடகா லோக் அயுக்தா போலீசார் அதிரடி

கர்நாடகாவில் கல்குவாரி நடத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

author-image
WebDesk
New Update
Karnataka Lok Ayukta police raided in Coimbatore

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

dmk | coimbatore | முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர்.

Advertisment

DMK leader Painthamil Pari in Coimbator

திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இவர், கோவை கிருஷ்ணா காலனியில் வசித்துவருகிறர்.

இவரது வீட்டில்  15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில் கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

DMK leader Painthamil Pari house in Coimbatore

இந்நிலையில் கர்நாடக பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது கிளம்பி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள நபர்கள் பரபரப்பாகினர்.

செய்தியாளர் பி ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment