Advertisment

தி.மு.க, காங்கிரஸ் சீட் பகிர்வில் சிக்கல்? கார்த்தி சிதம்பரம் பேட்டி

இந்தியா கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை; தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

author-image
WebDesk
New Update
தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை

இந்தியா கூட்டணியில் குழப்பம் இல்லை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Karti Chidambaram | Lok Sabha Election | புதுக்கோட்டையில் சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியா கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த அவர், “இந்தியா கூட்டணியில் குழப்பங்களுக்கு இடம் இல்லை; கூட்டணி வலுவாக உள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெறுகிறது” என்றார்.

Advertisment

மேலும், “மக்களவைத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழநாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றார். தொடர்ந்து, மோடியின் தமிழ்நாடு வருகை தொடர்பான கேள்விக்கு, “பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழ்நாடு அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போதை பொருள் புழக்கம், விற்பனை மற்றும் இறக்குமதிகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karti Chidambaram Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment