Advertisment

கார்த்தி சிதம்பரம் மனைவி அனுமதியின்றி பிரச்சாரம்... தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவருடைய மனைவி ஸ்ரீநிதி பிரச்சாரம் செய்தபோது, தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், தி.மு.க.வினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
A Srinidhi

கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவருடைய மனைவி ஸ்ரீநிதி பிரச்சாரம் செய்தபோது, தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், தி.மு.க.வினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்ரீநிதி அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவருடைய அம்மாவும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அதே போல, விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும், ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவருடைய கணவர் சரத்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். 

அதே போல, தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து அவருடைய கணவரும் பா.ம.க தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அதே போல, அவருடைய மகள்கள் இருவரும் சவுமியாவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவருடைய மனைவி ஸ்ரீநிதி பிரச்சாரம் செய்தபோது, தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், தி.மு.க.வினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஸ்ரீநிதி அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.  அ.தி.மு.க சார்பில் சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். பா.ஜ.க கூட்டணியில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் போட்டியிடுகிறார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவருடைய மனைவி ஸ்ரீநிதி, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீநிதியின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், ஸ்ரீநிதி உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கடிதம் பெற்றுள்ளீர்களா என்ற தேர்தல் அதிகாரிகளின் கேள்விக்கு ஆட்டோவுக்கு மட்டும் அனுமதி வாங்கிய கடிதத்தை கட்சி நிர்வாகிகள் காண்பித்தனர். 

இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srinidhi Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment