New Update
/indian-express-tamil/media/media_files/m63TnLgpXroFy8qu1i4F.jpg)
கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என மேயர் பிரியாவுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி கடிதம் எழுதி உள்ளார்.
கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என மேயர் பிரியாவுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி கடிதம் எழுதி உள்ளார்.
” கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்.
சென்னை நீர்நிலைகளில் தினமும் விடக்கூடிய சுத்திகரிக்கப்படாத கழுவுநீரில் கிட்டதட்ட 30 % கூவம் ஆற்றிலும், 60 % பக்கிங்காம் கால்வாயிலும், மீதம் உள்ளவை அடையாறு ஆற்றிலும் கலக்கின்றன. நீர்நிலைகளில் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இந்த ஆறுகளில் திடக்கழிவு மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியவை தினந்தோறும் வெளியேற்றப்படுகின்றன.
எனவே, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, அடையாறு சிற்றோடையின் முகத்துவார மறுசீரமைப்பு மற்றும் கூவம் ஆறு மறு சீரமைப்பு ஆகிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்று தனது கடித்தத்தில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.