20 அடி நீள அரிவாள்; தேர்தல் வெற்றிக்கு நேர்த்திக்கடனாக செலுத்திய கார்த்திக் சிதம்பரம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி; மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்திய கார்த்தி சிதம்பரம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி; மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்திய கார்த்தி சிதம்பரம்

author-image
WebDesk
New Update
Karti Chidambaram temple

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாளை இன்று நேர்த்திக்கடனாக செலுத்தினார்.

Advertisment

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாட்டில் பிரசித்தி பெற்ற கருப்பண சுவாமி கோயில் உள்ளது. மக்களவைத் தேர்தல் சமயத்தில், தேர்தலில் வெற்றி பெற்றால் மாரநாடு கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக அரிவாள் அடித்துப் போடுவதாக கார்த்தி சிதம்பரம் வேண்டுதல் வைத்திருந்தார். இந்தநிலையில், தேர்தலில் கார்த்தி சிதம்பரம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி., ஆகி உள்ளார்.

இதையடுத்து இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் 20 அடி நீள அரிவாளை கார்த்தி சிதம்பரம் நேர்த்திக் கடனாகச் செலுத்தினார்.

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sivagangai Karti Chidambaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: