Advertisment

வாகன சுரங்கப்பாதைகள் அமைக்க மத்திய அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலை பகுதிகளில் வாகன சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் கார்த்தி சிதம்பரம், மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisment

 

Karti Request letter

 

Advertisment
Advertisement

அதன்படி, மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலை (என்.ஹெச் 85 & 87) பகுதிகளான திருப்பாச்சேத்தி பைபாஸ் மற்றும் திருப்புவனம் பைபாஸ் ஆகிய இடங்களில் வாகன சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களில் இந்த நெடுஞ்சாலையை கடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் அதிக வேகத்தில் செல்லும் இந்த இடங்களில், பாதாளச்சுரங்கப் பாதைகள் இல்லாமல் இருப்பது பாதுகாப்பு குறைபாடுகளை உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nitin Gadkari Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment