New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/karti-p.chidambaram..jpg)
Karti P.Chidambaram, ED Summon, Delhi High Court
கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Karti P.Chidambaram, ED Summon, Delhi High Court
கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியிருக்கிறார். இந்த வழக்கில் அவரை சிபிஐ கைது செய்திருக்கிறது. அவரை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.
கார்த்தி சிதம்பரம் மீது இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கவேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
கார்த்தி சிதம்பரம் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய ரிட் மனு ஒன்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக தனது வக்கீல் மூலமாக நேற்று தாக்கல் செய்திருந்தார். அதில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி உள்ளார்.
கடந்த 6-ம் தேதி இந்த மனுவில் நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை ஒத்திவைத்தனர். இன்று (மார்ச் 8) மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது, கார்த்தி சிதம்பரம் இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்து தற்காலிக தீர்வை பெறலாம் என நீதிபதிகள் அவரது தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.
டெல்லி ஐகோர்ட்டில் இன்று மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மனுவில் நாளை விசாரிக்க கோரிக்கை விடலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.