Advertisment

'ஓராண்டு மட்டுமே புதுப்பிக்கப்படும்': கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட் வழக்கில் மத்திய அரசு வாதம்

கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பிக்க இயலாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

author-image
WebDesk
New Update
karti
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தன்னுடைய பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தரும்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். 

Advertisment

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று(ஜன.19) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, "மனுதாரர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், 10 ஆண்டுகள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது. ஓராண்டுக்கு மட்டுமே புதுப்பிக்கப்படும்" என்று வாதிட்டார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜ் ஆஜராகி, "பாஸ்போர்ட்டை சட்ட விதி 12-ன் படி 10 ஆண்டுகள் புதுப்பித்து தரவேண்டும். ஆனால் அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர்" என்று வாதிட்டார். 

இதை ஏற்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுத் க்கல் செய்யும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment