Advertisment

18 காளைகளை அடக்கிய கார்த்தி; கார் வழங்கிய அமைச்சர்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார்.

author-image
WebDesk
New Update
Karuppayurani Karthi won the Alankanallur jallikattu competition

அலங்காநல்லூர் ஜல்கிக்கட்டு போட்டிகள் இன்று நடந்தன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று (ஜன.17,2024) நிறைவு பெற்றன. இந்தப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார்.

இவருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் கார்த்தி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், “தாம் பட்டப்படிப்பு படித்துள்ளேன்; எனக்கு ஒரு அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்” என்றார். தொடர்ந்து, நான் ஜெயிப்பேன் என எனக்கு தெரியாது. போராடினேன் வெற்றி கிடைத்தது” என்றார்.

பின்னர், “போட்டி என்றால் எதிர்ப்பு இருக்கதான் செய்யும்; அதனை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்” என்றார். கருப்பாயூரணி கார்த்தி இந்தப் போட்டியில் 18 காளைகளை அடக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment