/indian-express-tamil/media/media_files/2025/09/28/tvk-1-2025-09-28-08-56-41.jpg)
கரூர் உயிரிழப்பு எதிரொலி: த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
த.வெ.க தலைவர் விஜய் நேற்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது அதிகப்படியான மக்கள் திரண்டதால் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே பலர் மயங்கி விழுந்தனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, பலர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு த.வெ.க தலைவர் விஜய் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது பத்திரிகையாளர்களை தவிர்த்த விஜய் தனி விமானம் மூலம் இரவு 11 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.
இதையடுத்து, தனது காரில் நீலாங்கரை வீட்டிற்கு சென்றார். கரூரில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பலர் விஜய்க்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் வருவதை அறிந்து அந்த பகுதியில் மக்கள் கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
த.வெ.க தலைவர் விஜய்க்கு ஏற்கனவே மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், கரூரில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கியுள்ள அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், த.வெ.க. தொண்டர்கள் தொடர்ந்து அங்கு வருகை தந்த நிலையில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று இரவு முதல் காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.