/indian-express-tamil/media/media_files/2025/10/11/whatsapp-image-2025-10-11-at-1-2025-10-11-13-47-50.jpg)
அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் இல்லை எனவும் ஜிடி நாயுடு திரைப்படத்தின் முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடித்துள்ளதாக கோவையில் நடிகர் மாதவன் பேட்டி.
இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள் கரூர் விவகாரம் பற்றி பேசினால் கடையை பற்றி பேச மாட்டார்கள் என நடிகர் மாதவன் கோவையில் பேட்டி. கோவை ஒப்பணக்கார வீதியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து நடிகர் மாதவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது.
அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் இல்லை எனவும் ஜிடி நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, கோவையில் தான் முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம். ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருவோம் என நம்புகிறேன்.
பின்னர் கரூர் விஜய் மக்கள் சந்திப்பில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த கேள்விக்கு இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள் கரூர் குறித்து பேசினால் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் எனவும் அதனால் வேண்டாம் என தவிர்த்து விட்டார்.
பி.ரஹ்மான்.
கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.