/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-10T120303.611.jpg)
கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன்கள் மொபைல் போன் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது கணவரை பிரிந்து தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி வீட்டில் வீட்டினுள் சார்ஜ் போட்டு, அருகில் தூங்கிக் கொண்டிருந்த போது மொபைல்போன் வெடித்ததாகவும், இதனால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி மூன்று பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர். தாய் முத்துலட்சுமி மரணம் அடைந்ததாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் மூன்று வயது மகன்கள் இருவரும் செல்லும் வழியிலயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது விபத்தா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.