/indian-express-tamil/media/media_files/2025/09/30/ananth-2025-09-30-14-04-43.jpg)
விஜய் கூட்ட நெரிசல் சம்பவம்: த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் எங்கே? புதுச்சேரியில் முகாமிட்டுள்ள கரூர் போலீஸ்
கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தை தேடி கரூர் போலீசார் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி
41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க.-வினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார், த.வெ.க., மாவட்ட செயலாளர்கள் மதியழகன், நிர்மல்குமார்,மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மூவரும் ஜாமீனில் வெளிவராத நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை தேடி டி.எஸ்.பி., தலைமையிலான இரு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் முதல் புதுச்சேரியில் முகாமிட்டு, விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.