கரூர் கூட்டநெரிசல் வழக்கு: மீண்டும் முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு

2வது முறையாக முன்ஜாமீன் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது. தனிப்படை போலீசார் தலைமறைவான இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

2வது முறையாக முன்ஜாமீன் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது. தனிப்படை போலீசார் தலைமறைவான இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Bussy anand arrest

கரூர் கூட்டநெரிசல் வழக்கு: மீண்டும் முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அவர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 3ம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் அவர் முன்ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். ஆனால், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரையும் கைது செய்யத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, புஸ்ஸி ஆனந்த் ஏற்கெனவே உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது கடந்த 3ம் தேதி விசாரைண மேற்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. இதனால் இருவருக்குமு் முன்ஜாமீன் கொடுக்க கூடாது என்று தமிழக அரசு வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தோடு, அவர்களின் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தற்போது அவர் 2-வது முறையாக முன்ஜாமீன் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு முதற்கட்டமாக பட்டியலிடப்பட்ட பின்னர், விசாரணைக்கான தேதி விரைவில் நிர்ணயிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த முறை இந்த வழக்கை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements
Chennai TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: