/indian-express-tamil/media/media_files/2025/09/15/screenshot-2025-09-15-150629-2025-09-15-15-06-52.jpg)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
இந்த சந்திப்பு இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்து பேசினர். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை த.வெ.க. தலைவர் விஜய் தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார். ஒவ்வோர் அறைக்கும் சென்ற அவர், அந்த அறையில் வைக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சந்திப்பு இன்று மாலை 2.50 மணியளவில் முடிந்ததையடுத்து வரவழைக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் பேசியது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நேரில் வரவழைக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கல்விச் செலவு, திருமணச் செலவு, வீட்டுக் கடன் உள்ளிட்ட விவரங்களை விஜய் கேட்டு வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீர் விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us