கரூர் துயரம்: ஆம்புலன்ஸை ஓட்டுநரை தாக்கிய த.வெ.க. மாவட்டச் செயலாளர் கைது

ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷனை கரூர் நகர காவல்துறையினர் சேலத்தில் கைது செய்து, விசாரணைக்காக கரூர் அழைத்து வந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷனை கரூர் நகர காவல்துறையினர் சேலத்தில் கைது செய்து, விசாரணைக்காக கரூர் அழைத்து வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-10-10 at 6.52.10 AM

Karur

கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Advertisment

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டு நரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். 

முன்னதாக, ஆம்புலன்ஸின் குறுக்கே காரை நிறுத்தியதாக அந்தக் காரின் உரிமையாளரும் ஓட்டுநருமான சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர். மணிகண்டன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் சரணடைந்தார். அவருக்கு மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி. பரத்குமார் ஜாமீன் வழங்கினார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷனை கரூர் நகர காவல்துறையினர் சேலத்தில் கைது செய்து, விசாரணைக்காக நேற்றிரவு கரூர் அழைத்து சென்றனர்.

செய்தி: சண்முகவடிவேல்

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: