கரூர் துயரத்தால் அதிர்ச்சி; த.வெ.க நிர்வாகி மரணம்: செந்தில் பாலாஜி மீது புகார் கூறி கடிதம்

தவெக விஜய் நடத்திய கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து ஆதங்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாக அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டார்.

தவெக விஜய் நடத்திய கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து ஆதங்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாக அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
download (61)

விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) கிளை நிர்வாகி அய்யப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கரூரில் நிகழ்ந்த சம்பவம் குறித்து துயரத்துடன் கடிதம் எழுதி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அய்யப்பனின் உடலையும் அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெரிய திரளான மக்கள் திரண்டிருந்தனர். நிகழ்ச்சியின் போதே ஏற்பட்ட கூட்ட நெரிசலால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கோரமான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துயர நிகழ்வுக்கு பின்னர், விழுப்புரம் மாவட்டம் விற்பட்டுத் தொகுதியில் தவெக கிளை நிர்வாகியாக செயல்பட்டு வந்த அய்யப்பன் தற்கொலை செய்துகொண்டார். அவரது வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார். போலீசார் அவரின் உடலையும், அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கடிதத்தில், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் பலியானவர்கள் பற்றிய வேதனை மற்றும் அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தவெக கட்சியின் நிர்வாகத்தில் பெரும் அதிர்வையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியினரிடையே, "அய்யப்பன் கட்சிக்கு மிகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒருவர்; அவரைப் போல் செயல்பட்ட நிர்வாகியை இழந்தது வேதனையுடனும் வருத்தத்துடனும் எதிர்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

அய்யப்பன், நிகழ்ந்த பேரழிவில் எதையும் செய்ய முடியாத நிலைமைக்கு வருந்தியிருந்தார் என்றும், இந்தப் பெரும் சோகம் அவரை உள்வாங்கியிருந்தது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்ட நெரிசலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் போலீசார் மீது குற்றம் சாட்டியதாகவும், அவர்களே காரணம் என குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

அய்யப்பனின் தற்கொலை செய்தி பரவியதுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் மூழ்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகள் செய்துள்ளனர்.

கரூரில் நடந்த இந்த துயர சம்பவம், அரசியல் பரப்புகளிலும் பெரிய எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அய்யப்பனின் தற்கொலை சம்பவம், அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமையும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: