விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த பெரும் கூட்டம்; கரூர் துயரத்திற்கு காரணம்: பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன் அறிக்கை

கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பொறுப்பு டிஜிபி (DGJP) வெங்கட்ராமன் ஒரு முக்கியமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளார்.

கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பொறுப்பு டிஜிபி (DGJP) வெங்கட்ராமன் ஒரு முக்கியமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
karur stampede

கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஒரு முக்கியமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கரூர் பரப்பரையில் நடந்த இந்த கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டதாக பொறுப்பு டிஜிபி (DGJP) வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த 39 பேரில், 10 குழந்தைகள், 16 பெண்கள், மற்றும் 12 ஆண்கள் அடங்குவர்.
 
விஜய்யின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த கூட்டத்திற்கு அதிகமான மக்கள் கூடியிருந்தனர். குறிப்பாக, விஜய்க்கு வரவேற்பு கொடுத்த இடத்திலிருந்து பல வாகனங்கள் பின் தொடர்ந்ததாலேயே கூட்டம் மேலும் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஜய் பேசத் தொடங்கியபோது, காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக நன்றி கூறினார்.

Advertisment

அவரது வருகை குறித்து த.வெ.க.வின் X சமூக வலைத்தளத்தில் (முன்னர் ட்விட்டர்) நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்காகத் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.  கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டதாக பொறுப்பு டிஜிபி (DGJP) வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த 39 பேரில், 10 குழந்தைகள், 16 பெண்கள், மற்றும் 12 ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

TVK Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: