Advertisment

ஏழுமலையான் பக்தர்களுக்கு அறிவிப்பு; காட்பாடி - திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
saa

திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

திருப்பதி மற்றும் காட்பாடி இடையில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தெற்கு மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருப்பதி மற்றும் காட்பாடி இடையில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

Advertisment

இதனால் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 50 நிமிடங்களும், காட்பாடி ரயில் நிலையத்தில் 70 நிமிடங்களும் ஒழுங்குபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்றம் இன்று டிசம்பர் 1 முதல் வருகிற 20 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு காட்பாடி நோக்கி புறப்படும் திருப்பதி- காட்பாடி மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதி- காட்பாடி இடையில் தேவைக்கேற்ற வசதியான இடத்தில் 60 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisement

எனவே பக்தர்கள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vellore Tirupati
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment