அதானி குழுமத்தின் மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் (எம்ஐடிபிஎல்) முன்மொழியப்பட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தின் மெகா விரிவாக்கத்திற்கான பொது விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கப்பணி, மேம்பாட்டுக்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (இஐஏ) ஆய்வு முடிக்கப்பட்டு வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வரிவாக்க பணிக்கான பொது விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு மீஞ்சூரில் உள்ள சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் உள்ள பகவன் மகாவீர் ஆடிட்டோரியத்தில் நடத்தப்படும்" என்று டிஎன்பிசிபியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 2,472.85 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் முன்மொழியப்பட்டுள்ளது. இதில் தற்போதுள்ள 133.50 ஹெக்டேர் பரப்பளவு, 761.8 ஹெக்டேர் அரசு நிலம், 781.4 ஹெக்டேர் தனியார் நிலம் மற்றும் 796.15 ஹெக்டேர் கடல் மீட்பு நிலம் என கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பெரிய துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படும் கட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அதானி குழுமம் ரூ .53,000 கோடிக்கு மேல் முதலீட்டில் செய்யவுள்ளது.
ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தக்கூடிய என்னூரில், சுற்றுச்சூழல் அமைப்பு ஈரநிலங்களாகவும், இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான புலிகாட் ஏரிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து பல புகார்களை வந்ததை தொடர்ந்து, அந்த பகுதியை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் துணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தின் வடக்கே உள்ள புலிகாட் ஏரி, தெற்கில் எண்ணூர் க்ரீக், மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாயுடன் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளாக உள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால், நியமிக்கப்பட்டுள்ள துணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடற்கரையின் சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிப்பதில் முக்கியமான கடலோர ஒழுங்குமுறை மண்டலம், " புலிகாட் அருகே உள்ள கரையோரப் பகுதி மிகவும் குறுகியது.
அப்பகுதில், உப்புத் தொட்டிகள் உட்பட பரந்த நீர் உள்ள பகுதியாக உள்ளன. மேலும் சூறாவளிகள் மற்றும் சுனாமிகளிலிருந்து கடற்கரையை பாதுகாக்கும் எண்ணூர் ஷோல்களில் துறைமுக விரிவாக்கத்தின் தாக்கம் இருக்குமா என்பது குறித்து விரிவான ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பு நீர் வழிகள், உப்புத் தொட்டிகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், சதுப்பு நிலங்கள், மணல் திட்டுகள், பனைமர நிலைகள் மற்றும் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பாக, உள்ளூர் மக்களின் கவலைகளையும் மத்தி துணைக் குழு பதிவு செய்து ஒப்புதல் அளித்தது.
ஆனாலும் சுற்றுச்சூழல் துறையின் ஆய்வின் முடிவில், துறைமுக இருப்பிடத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இல்லை என்றும், மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும், சிறந்த இயற்கை அழகு, வரலாற்று அல்லது பாரம்பரியம் பகுதிகள் இதில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகள் மற்றும் மரபணு வேறுபாடு நிறைந்த பகுதிகள் என்றும், "மூலதன அகழ்வு, மறுசீரமைப்பு, அகழி கெடுக்கும் அகற்றுதல், ஊடுருவல் வசதிகளின் விரிவாக்கம் / மாற்றம், கடல் கட்டமைப்புகள் ஆகியவை கடல் சூழலை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
ஆனாலும் "முன்மொழியப்பட்ட வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக புலிகாட் ஏரிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதையும் மாதிரி பகுப்பாய்வு தெளிவாகக் காட்டுகிறது" என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.