2026 ஜனவரிக்குள் காவிரி புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்-நெடுஞ்சாலைத்துறை

2026 ஜனவரிக்குள் காவிரி புதிய பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 காவிரி பாலம்

காவிரி புதிய பாலம் 2026யில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - நெடுஞ்சாலைத்துறை

திருச்சி - ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கிய பாலமாக காவிரி பாலம் இருந்து வருகிறது. 1976-இல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Advertisment

காவிரியின் குறுக்கே புதிய பாலம் வேண்டும் என்பதை உணா்ந்து, தற்போதுள்ள பாலத்தின் அருகே ரூ.106 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய பாலமானது, ஏற்கெனவே உள்ள பாலத்தின் மேற்கே 545 மீட்டா் நீளம் 17.75 மீட்டா் அகலத்தில், 15 பிரம்மாண்ட தூண்களுடன் 16 டெக்குகளுடன், இருபுறமும் தலா 1.5 மீட்டா் அகலம் கொண்ட நடைபாதையுடன் 4 வழித்தடங்களுடன் கட்டப்படுகிறது.

பாலம் கட்டுமானத்துக்கு ரூ. 68 கோடி, நிலம் கையகப்படுத்த ரூ.30 கோடி, அணுகுசாலை, ரவுண்டானா, மின்கம்பம் அமைப்பது உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ. 8 கோடி என கணக்கிட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 

ஆனால், டெல்டா பாசனத்துக்காக காவிரியில் தண்ணீா் திறக்கப்பட்டதால், காவிரியில் தண்ணீா் செல்லும் பகுதியில் மட்டும் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது, தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதாலும் அறுவடை காலம் முடிந்து விட்டதாலும் மீண்டும் ஜூன் மாதம்தான் தண்ணீா் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

எனவே, இந்தத் தருணத்தை பயன்படுத்தி காவிரி ஆற்றுக்குள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. பாலத்தின் தூண்களின் மீது அதன் தாங்கும் திறன் சோதனையும் முடிந்துள்ளது. ஓயாமாரி பகுதியில், புதிய பாலத்துக்கான தூண்களின் மீது பொருத்தப்படும் காரிடா்கள் உற்பத்தி பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், காவிரியில் பாசனநீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆற்றில் கட்டப்பட வேண்டிய பாலத்தின் கட்டுமானப் பணிகளை பெருமளவில் முடிக்க திட்டமிட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 

கடந்த சில நாள்களாக காவிரியில் செல்லும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், ஆங்காங்கே மணல் குவியலை ஏற்படுத்தி நீரின் ஓட்டம் திருப்பி விடப்பட்டு, கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பா் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன. 

2026 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இலக்கு வைத்து பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்துள்ளனர். 
க.சண்முகவடிவேல்

Highway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: