/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project35-1.jpg)
Kaviaruvi
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் வறட்சியினாலும் கவியருவி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சக்தி எஸ்டேட் மற்றும் தல நார் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஏற்பட்டுள்ளது.
கவியருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை #Coimbatore | #KaviAruvipic.twitter.com/4PXy8YawyV
— Indian Express Tamil (@IeTamil) July 26, 2023
கவியருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த வாரம் வனத்துறை அனுமதி அளித்தது. இந்நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.