/tamil-ie/media/media_files/uploads/2023/03/bus-1.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைய உள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான எல்லா வசதிகளும் பேருந்து நிலையத்தில் உள்ளன.
வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே புதிய மின்சார ரயில் நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில் நிலையத்தில் இருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆகாய நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் மெட்ரோ ரயில் சேவையை பயனப்படுத்த வசதியாக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தின்படி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதற்கு ரூ.4080 கோடி செலவாகும்.
இந்நிலையில் இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறியதாவது, ‘ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பிரதான கட்டிடத்தின் முகப்பு பகுதிக்கு எதிரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் ஒதுக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வருவதற்கான பாதையை ஒட்டி இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இதன் அடிப்படையில் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.