சாக்லெட் பாக்கெட்டில் கொக்கைன்... சென்னையில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; கென்யா இளைஞர் கைது

அந்த சாக்லெட்களை முழுமையாக சோதனை செய்த போது அவற்றின் உள்ளே கொக்கைன் போதை பொருள் சுமார் 2 கிலோ இருந்தது தெரியவந்தது . அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 கோடி என தெரியவந்தது. இதையடுத்து, அந்த போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த சாக்லெட்களை முழுமையாக சோதனை செய்த போது அவற்றின் உள்ளே கொக்கைன் போதை பொருள் சுமார் 2 கிலோ இருந்தது தெரியவந்தது . அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 கோடி என தெரியவந்தது. இதையடுத்து, அந்த போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

author-image
WebDesk
New Update
cocaine drug

இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த அதிகாரிகள், சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.

எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளை சாக்லேட் பாக்கெட்டில் மறைத்து கடத்தி வந்த கென்யா நாட்டு இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

Advertisment

எத்தியோப்பிய நாட்டின் தலைநகர் அடிடாஸ் அபாபீல் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை காலை வந்த விமானத்தில், போதை பொருள் கடத்துவதாக சென்னை மத்திய வருவாய் புறனாய்வு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது, அப்போது அதிகாரிகளுக்கு, ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. 28 வயது மதிக்கத்தக்க அந்த பயணியை அதிகாரிகள் தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். அவரது உடம்பை சோதனை செய்த போது சாக்லேட் இருப்பது தெரியவந்தது.

அந்த சாக்லெட்களை முழுமையாக சோதனை செய்த போது அவற்றின் உள்ளே கொக்கைன் போதை பொருள் சுமார் 2 கிலோ இருந்தது தெரியவந்தது . அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 கோடி என தெரியவந்தது. இதையடுத்து, அந்த போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment
Advertisements

இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த அதிகாரிகள், சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்து வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அவர் கென்யாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

எத்தியோப்பியாவிலிருந்து சென்னை விமான நிலையத்து சாக்லெட் பாகேட்டுகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய வருவாய் புறனாய்வு துறை  அதிகாரிகள் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: