/indian-express-tamil/media/media_files/2025/05/05/B0KjBaD3XLdelgJoy47O.jpg)
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான பெண் மருத்துவர் ஜ்வாலா, தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் மன உளைச்சலில் இருந்ததே இந்த முடிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடையாறில் உள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் ஜ்வாலா, கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்டவர். இந்த மாத தொடக்கத்தில்தான் இவர் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் ஒரு ஃபெல்லோஷிப் திட்டத்திற்காக பணியில் சேர்ந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று இவர் வேலைக்கு வராததாலும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததாலும் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள், அடையாறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், அவரது அடுக்குமாடி குடியிருப்பு கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது அறையில் எந்தவித தற்கொலை குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அடையாறு காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்த ஜ்வாலா, கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.