கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு (humanities) படித்து வந்தார். ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரயு பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார்.
Advertisment
பாத்திமா லத்தீப்பின் தாய் சுஜிதா நேற்றிரவு முதல் பாத்திமாவிற்கு போன் செய்துள்ளார். ஆனால், பாத்திமா போனை எடுக்கவில்லை. இன்று காலையும் பாத்திமாவிற்கு அவரது தாய் சுஜிதா போன் செய்துள்ளார். அப்போதும் எடுக்காததால் சந்தேகமடைந்த சஜிதா, தனது மகளின் தோழிகளுக்கு கால் செய்து போன் எடுக்காத விவரத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து பாத்திமா லத்தீபின் தோழிகள் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். நெடுநேரமாகியும் திறக்காததால் விடுதி ஊழியர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா லத்தீப் ஃபேனில் தூக்கு மாட்டி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisment
Advertisements
தகவலறிந்த கோட்டூர்புரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக பெண்ணின் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? தேர்வில் மதிப்பெண் குறைவுதான் தற்கொலைக்குக் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.