கேரள நிலச்சரிவு : உயிரிழந்த தமிழர் காளிதாஸ் குடும்பத்தினருக்கு நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
CM kerala landslide

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம், வயநாட்டில், சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. இதுவரை சுமார் 105 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பேரிடர் மீட்புக் குழுவின் மீட்புப்பணிகள் தொடர்ந்து, நடைபெற்று நிலையில், உயிரிழந்தவர்களில் 50 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் தமிழர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இந்த நிலச்சரிவில் சிக்கி நீலகிரி பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்தார்.

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் காளிதாஸ்க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: “நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 34) என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனிடையே, கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஐயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கல்யாண்குமார் வயநாடு சூரல்மலையில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: