New Update
/indian-express-tamil/media/media_files/iSLVQeUJsktplkAir6VX.jpg)
பாலக்காடு நெல்லியாம்பதி பகுதியில் மண் சரிவு; 2000-க்கும் மேற்பட்ட மக்கள் தவிப்பு; மீட்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதியில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாவை நம்பி வாழும் மக்கள் இங்கு அதிகம்.
இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில், பெரிய பாறைகள் நெல்லியாம்பதி, நெம்மாறா சாலையில் விழுந்துள்ளன. இதனால் நெல்லியாம்பதி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு பொக்லைன் மட்டுமே அனுப்பப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைய 4 நாட்களுக்கு மேலாகும் என்பதால், மீட்பு பணியை துரிதப்படுத்தவும், இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் பாலக்காடு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலக்காடு நெல்லியாம்பதி பகுதியில் மண் சரிவு; 2000-க்கும் மேற்பட்ட மக்கள் தவிப்பு#Palakad pic.twitter.com/8BJOLaOzZT
— Indian Express Tamil (@IeTamil) July 31, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.