Advertisment

தமிழக - கேரள எல்லையில் நூதன முறையில் பணம் எடுத்துச் சென்ற இளைஞர்; ரூ.14 லட்சம் பறிமுதல்

கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த நபர் பேருந்தில் சோதனையில் சிக்கினார்.

author-image
WebDesk
New Update
money

தமிழக கேரள எல்லையான வளையார் சோதனை சாவடியில் ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய இளைஞர் 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக கேரள எல்லையான வளையார் சோதனை சாவடியில் ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய இளைஞர் 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த நபர் பேருந்தில் சோதனையில் சிக்கினார்.

Advertisment

கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை  மேற்கொண்டனர் அப்போது அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால் கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு  செய்த போலீசார்,   அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment