Advertisment

நர்சிங் மாணவியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்- கைது செய்த சென்னை போலீஸ்

குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில், நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஃபூசியா, நியூ காலனியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மூன்று நாட்களாக அவள் கல்லூரிக்கு செல்லவில்லை.

author-image
WebDesk
New Update
Chennai

Chennai

சென்னையில் காதலியை கொலை செய்து அந்த போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த கேரள இளைஞரை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பவுசியா (20), ஆஷிக் (20) ஆகியோர் காலை 10.30 மணியளவில் ஹோட்டலுக்கு வந்ததாக, ஹோட்டல் ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அருகில் உள்ள உணவகத்தில் இருந்து ஆஷிக்கை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இவர்களுக்கு  ஒரு குழந்தையும் பிறந்தது, அதை சிக்கமகளூரில் தத்துக் கொடுத்தனர்.

குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில், நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஃபூசியா, நியூ காலனியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மூன்று நாட்களாக அவள் கல்லூரிக்கு செல்லவில்லை.

ஜோடி, ஹோட்டலுக்குச் சென்ற உடனேயே, ஆஷிக் மொபைல் போனில் வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் குறித்து பவுசியா கேள்வி எழுப்பியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆஷிக் பவுசியாவை தாக்கி, தனது டி-சர்ட்டால்  கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் காதலியின் உடலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

கல்லூரியில் இருந்த பவுசியாவின் நண்பர்கள் சிலர், ஆஷிக் எண்ணையும் வைத்திருந்தனர், மாலை 5 மணியளவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை செய்து, குரோம்பேட்டை சிஎல்சி ஒர்க்ஸ் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சடலத்தை கண்டெடுத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல பெண்களுடன் ஆஷிக்-கு தொடர்பு இருப்பது பற்றி பவுசியாவுக்கு தெரிந்தபோது, ​​​​இந்த ஜோடி பிரிந்தது.

மேலும், கேரள போலீஸில் புகார் அளித்த அவர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்.

ஆஷிக் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் மன்னிப்புக் கேட்டு அவளுடன் மீண்டும் பழகி இருக்கிறான். அப்போதிருந்து, அவளை சந்திக்க வந்திருக்கிறான்.. பவுசியாவின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment